சனி, 5 செப்டம்பர், 2015

பிறப்பிற்கு இறப்பா? அல்லது இறப்பிற்கு இறப்பா?:::

அமைதி தொலைத்து
ஆடம்பரம் தேடி
இரக்கம் இழந்து
ஈகை மறந்து
உணர்வுகள் அடக்கி
ஊருக்கு ஊனம்தந்து
எட்டெடுத்து வைத்து
ஏற்றம் காணாமல்
ஐம்புலன்களை அடக்காமல்
ஒழுக்கம் மறந்து
ஓயாமல் உழலும்

வீணணாய் வாழ்ந்து!
மண்ணோடு மாள்வதற்கு!
மானிடப் பிறப்பெதற்கு?

அறிவை ஆயுதமாக்கி
ஆர்ப்பரித் தெழுந்து
இருளை அகற்ற
ஈரடியில் தடம்பதித்து
உணர்ச்சிகள் குவித்து
ஊறிணை அழித்து
ஐயங்கள் தௌிந்து
ஒற்றுமையோடு வாழ
ஓங்கும் நம்புகழ்

என்று!
வீரமாய் மார்தட்டி
விவேகத்தோடு வழி அமைத்து!
இவ்வுலகை வெல்கையில்!
வரலாற்றில் இறந்துபோகும்
நம் இறப்பு!

                    -- தல்லிதாசன்

2 கருத்துகள்: